முகப்பு /செய்தி /இந்தியா / தந்தையைக் கொன்று 30 துண்டுகளாக்கி ஆழ்துளை கிணற்றில் வீசிய மகன்.. கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்

தந்தையைக் கொன்று 30 துண்டுகளாக்கி ஆழ்துளை கிணற்றில் வீசிய மகன்.. கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்

கொலை

கொலை

Crime News : கர்நாடாகவில் தந்தையை மகனே வெட்டிக்கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • karnataka, India

டெல்லியில் காதலியை வெட்டி துண்டுகளாக்கி எறிந்த காதலன், இரண்டாவது கணவனை மகனோடு சேர்ந்து  கொன்று வெட்டி உடலின் பகுதிகளை டெல்லியின் வெவ்வேறு பகுதியில் வீசிய சம்பவங்கள் வெளிவந்த நிலையில் அதே போன்ற சம்பவம் ஒன்று கர்நாடகாவில் நடந்துள்ளது.

கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் கடந்த வாரம்  தந்தையை மகனே  கொன்று அவரது உடலை  30 துண்டுகளாக வெட்டி பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகல்கோட் மாவட்டத்தை சேர்ந்தவர் பருஷ்ராம் கோலி என்பவருக்கு மனைவி மற்றும் 5 குழுந்தைகள் உள்ளனர். கடந்து 2 நாட்கள் பருஷ்ராம் கோலி வீட்டுக்கு வராததால்  டிசம்பர் 8-ம் தேதி அன்று மாலை அவரது மனைவி தனது கணவரைக்  காணவில்லை என போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தங்களது விசாரணையைத்  தொடங்கினர்.

இதையும் படிங்க: கல்லூரியில் நடந்த வக்கிர 'ராகிங்' கொடுமையை வெளிக்கொண்டு வர மூன்று மாதம் மருத்துவ மாணவியாக நடித்த போலீஸ்..!

பருஷ்ராம் மாயமானது தொடர்பாக குடும்பத்தினரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. மதுபோதையில் அவரது மகன்களில் ஒருவரே அவரை கொன்று உடலை வெட்டி வீசியது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பாகல்கோட் காவல் கண்காணிப்பாளர் (SP) ஜெயபிரகாஷ் கூறுகையில், காணாமல் போன பருஷ்ராம் குலாலி என்பவருக்கு மனைவியும் 5 வாரிசுகளும் இருந்துள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்து அடிக்கடி தகராறு செய்து குடும்ப உறுப்பினர்களை தாக்கியுள்ளார். இதனால் இவரது மகன்கள் இவர்மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.

கடந்த  டிசம்பர் 6ஆம் தேதி அன்று மகன் வித்தல் குலாலி குடித்து விட்டு பருஷ்ராமை  முதோல் நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாந்தையார் பைபாஸ் அருகே உள்ள விவசாய நிலத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இரும்பு கம்பியால் தலையில் அடித்துக் கொன்றுள்ளார். கொலை செய்து விட்டு போதையில் அவரது உடலை கோடரியால் 30 துண்டுகளாக வெட்டி அருகில் இருந்த ஆள் துளைக் கிணற்றில் வீசிவிட்டு வீடு திரும்பியுள்ளார். வீட்டில் எதுவும் நடக்காததைப் போல் இருந்துள்ளார்.

இதையும் படிங்க: வெப் சீரிஸில் வந்த மும்பை தாக்குதல்.. பாகிஸ்தானின் ஓடிடி தளத்தை தடை செய்த இந்தியா!

போலீஸார் தங்கள் பாணியில் விசாரிக்க  மதுபோதையில் கொலை செய்ததாக வித்தல் ஒப்புக்கொண்டார். மேலும் தனது தந்தையைக் கொன்றதில் எந்த தவறும் செய்யவில்லை என்று போலீசாரிடம் கூறியுள்ளார். அவரது உடல் அடையாளம் காணப்பட்டு இரும்பு கம்பி, கோடாரி மற்றும் உடலின் பெரும்பாலான பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்  தெரிவித்தனர்.

உடல் உறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு இந்திய தண்டனைச் சட்டம் 302 (கொலை) மற்றும் 201 (ஆதாரங்கள் காணாமல் போனது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

First published:

Tags: Crime News, Karnataka, Murder case, Tamil News