காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி, பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்குமாறு காஷ்மீர் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீருக்கான சிறப்பு மற்றும் மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தைச் சேர்ந்த தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இதற்கிடையில், மெஹ்பூபா முஃப்தி பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவரது மகள் இல்திஜா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என காஷ்மீர் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
மெஹ்பூபா முஃப்தி தவிர உமர் அப்துல்லாஹ், ஃபரூக் அப்துல்லாஹ் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிலர் கடந்த ஆகஸ்டு 5ஆம் தேதி முதலே பொது பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.