புதுச்சேரியின் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒருபோதும் நான் நினைத்ததே இல்லை என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்று 2ம் ஆண்டு துவக்க விழா புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, புதுவையை மேம்டுத்த பல நல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் புதுச்சேரி மாடல்தான் மிகவும் சிறப்பானது.
புதுச்சேரியின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள வசதிகள் உயர்த்தப்பட வேண்டும்.
முதல்வரும் கவர்னரும் இணைந்து செயல்படுவதை தவறாக சித்தரிக்கிறார்கள், ஆளும் அரசுக்கு அதிகாரத்தைப் பெற்றுக் கொடுக்கத்தான் முயற்சிக்கிறேனே தவிர, ஒரு போதும் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நான் நினைத்ததே இல்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அனைத்து விதத்திலும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். புதுச்சேரி அனைத்து விதத்திலும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்பது சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்.
புதுச்சேரியின் மீது பிரதமர் நரேந்திர மோடியும் மிகவும் அக்கறையுடன் செயல்படுகிறார் என்று அவர் கூறினார்.
துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார் சாய் சரவணகுமார், உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுத்துறை அதிகாரிகள் என திரளாக பங்கேற்றனர்...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.