பீகார் மாநிலத்தில் கிராம வளர்ச்சித்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. பீகார் மாநிலம் கிஷான்கஞ்ச் பகுதியில் கிராம மேம்பாட்டுத்துறையில் செயல் பொறியாளராக இருப்பவர் சஞ்சய் குமார் ராய்.
இவர் பெருமளவில் லஞ்சம் வாங்கும் ஊழல் பேர்வழி என்ற தகவல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு சஞ்சய் குமாருக்கு கீழ் வேலை செய்யும் அலுவலர்கள் மூலம் தெரியவந்தது. தனக்கு கிடைத்த துப்பின் பேரின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சஞ்சய் குமார் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.2,000 மற்றும் ரூ.500 மதிப்பிலான நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரெய்டுக்கு வந்த அதிகாரிகளே மிரண்டு போகும் அளவிற்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து பணம் எண்ணும் இயந்திரத்தை கொண்டு அதை எண்ணிய அதிகாரிகள் அவர் வீட்டில் மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்ததாக தெரிவித்துள்ளனர்.
#WATCH | Bihar: Cash counting is underway at the residence of Sanjay Kumar Rai, Executive Engineer of the Kishanganj Division of Rural Works Department in Patna.
Vigilance department has conducted raids at 3-4 premises of Sanjay Kumar Rai in Bihar pic.twitter.com/RwW04tNs4I
— ANI (@ANI) August 27, 2022
பணத்துடன் சேர்த்து பல லட்சம் மதிப்பாலான நகைகள், சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் அங்கு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுஜித் சாகர் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் சஞ்சய் குமார் அளித்த தகவில் தொடர்புடைய அவருக்கு தொடர்புடைய சில இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இதில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bihar, Vigilance officers