பெண் பயிற்சியாளர் அளித்த பாலியல் புகார் காரணமாக ஹரியானா விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய பெண் பயிற்சியாளர், அமைச்சர் சந்தீப் சிங் தன்னை முதலில் ஜிம்மில் பார்த்ததாகவும், பின்னர் தன்னை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டதாக கூறினார். அதில் அங்கு அவர் தனது தேசிய விளையாட்டு சான்றிதழ் நிலுவையில் இருப்பதாக கூறி தன்னை அழைத்ததாக பயிற்சியாளர் கூறினார்.
இதனையடுத்து அவர் சில ஆவணங்களுடன் இங்குள்ள அவரது குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலகத்தில் அவரை சந்திக்க ஒப்புக்கொண்டதாகவும், அங்கு சென்றபோது, அமைச்சர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றம் சாட்டை முன் வைத்தார். இதனையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளித்தன் பேரில் சந்தீப் சிங் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஹரியானா விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை ஹரியானா முதல்வர் கட்டாரிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் தன் பேருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இப்படி குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்றும் இதனை நேர்மையாக விசாரணையை எதிர்கொள்வேன் என சந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Haryana