GOVT TO SELL UP TO 20 PERCENT STAKE IN IRCTC HERE IS WHAT YOU SHOULD KNOW VIN GHTA
IRCTCன் 20 சதவீத பங்குகளை விற்கும் மத்திய அரசு- முழு விவரம்!
மாதிரி படம்
பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டில் இருந்து ரூ .1.20 லட்சம் கோடியும், நிதி நிறுவனங்களில் பங்கு விற்பனையிலிருந்து ரூ.90,000 கோடியும் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வழக்கம் போல் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார சரிவை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு வழிகளில் நிதி திரட்ட திட்டமிட்டு வரும் வேளையில், IRCTC நிறுவனத்தின் 15 முதல் 20 சதவீத பங்குகளை விற்கத் துணிந்துள்ளது. இன்று சந்தாவுக்காக திறக்கப்பட்ட ஆஃபர் ஃபார் சேல் (Offer for Sale (OFS)) மூலம் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனில் (Indian Railway Catering and Tourism Corp (IRCTC)) 20 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்கப் போகிறது. இது 2,40,00,000 ஈக்விட்டி பங்குகளை விற்பனை செய்யும், மேலும் இது 15 சதவீத பங்குகளை உள்ளடக்கி, கூடுதலாக வழங்கப்பட்ட மொத்த தொகையில் 5 சதவீதத்தை விலக்கி, ஈக்விட்டி பங்கு மூலதனத்தை 80,00,000 பங்குகளை சேர்க்கும்.
"ஐ.ஆர்.சி.டி.சியில் (IRCTC) விற்பனைக்கான சலுகை சில்லறை அல்லாத முதலீட்டாளர்களுக்கு நாளை திறக்கப்படுகிறது. சில்லறை முதலீட்டாளர்களுக்கு 2ம் நாள் கிடைக்கும். மேலும், இந்தப் பங்கு விற்பனையை ஒன்றுக்கும் அதிகமான கட்டங்களாக நடத்த மத்திய அரசு விற்பனை வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஐஆர்சிடிசி (IRCTC) பங்குகள் ஓரே சமயத்தில் விற்பனை செய்யப்படாமல் பல பகுதிகளாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) 87.40 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது மேலும், நிறுவனம் தனது பங்குகளை 75 சதவீதமாகக் குறைக்க திட்டமிட்ட இப்போது அதன் பங்குகளை விற்பனை செய்கிறது. இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India(SEBI)) வைத்திருக்கும் விதிமுறைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் 20 சதவீத பங்குகளை விற்பனை செய்வதாக அறிவித்ததை அடுத்து, ஐ.ஆர்.சி.டி.சியின் (IRCTC) பங்கு விலை இன்று 13 சதவீதமாக குறைந்துள்ளது என்று moneycontrol.com தெரிவித்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி பங்குகள் பி.எஸ்.இ.(BSE) யில் தலா ரூ .1,618.05 ஆக முடிவடைந்தது, இது முந்தைய முடிவிலிருந்து 1.55 சதவீதம் சரிவை பதிவு செய்தது. சலுகையின் விலை ரூ.1,367 ஆக மொத்தம் 3.2 கோடி பங்குகளை விற்று அரசு ரூ .4,374 கோடியை திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பங்கு விற்பனையிலிருந்து பெறப்பட்ட தொகை, கோவிட் -19 நெருக்கடியின் காரணமாக பட்டினியால் வாடும் அரசாங்கத்தின் கருவூலத்தை மேம்படுத்த இந்தத் தொகை உதவும். திரட்டப்பட்ட பணம் ரூ.2.10 லட்சம் கோடி முதலீட்டு இலக்கை நோக்கி நகர உதவும்.
பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டில் இருந்து ரூ .1.20 லட்சம் கோடியும், நிதி நிறுவனங்களில் பங்கு விற்பனையிலிருந்து ரூ.90,000 கோடியும் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஐந்து ரயில்வே நிறுவனங்களை பட்டியலிட 2017ல் மத்திய அமைச்சரவை தனது யோசனையை முதலில் வழங்கியது. ஐர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் (IRCON International Ltd), ரைட்ஸ் லிமிடெட், ரெயில் விகாஸ் நிகாம் லிமிடெட் மற்றும் ஐஆர்டிசி (RITES Ltd, Rail Vikas Nigam Ltd and IRTC) ஆகிய நான்கு நிறுவனங்கள் ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ளன, மீதமுள்ள நிறுவனமான ஐஆர்எஃப்சி (IRFC) இந்த நிதியாண்டில் தடுக்கப்படும்.
ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இந்தியாவில் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் கேட்டரிங் சேவைகள், ஆன்லைன் ரயில் டிக்கெட் சேவை மற்றும் பேக் செய்யப்பட்ட குடிநீரை வழங்குகிறது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு ஐபிஓ (IPO) மூலம் ரூ.645 கோடியை ஈட்டியுள்ளது.