பெங்களூருவில் 19 வயது மாணவி கல்லூரி வளாகத்திலேயே குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பிரசிடென்சி கல்லூரியில் படித்து வந்த லியாஸ்மிதா என்ற மாணவி, வேறு கல்லூரியைச் சேர்ந்த பவன் கல்யாண் என்ற மாணவரின் காதலை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், பிரசிடென்சி கல்லூரிக்குச் சென்ற அந்த மாணவர், மாணவி லியாஸ்மிதாவை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.
What’s happening in city a girl murdered inside campus of presidency university Bangalore @NEWS9 @tv9kannada @CMofKarnataka @INCKarnataka @NSUIKarnataka @DcpComdCentre @KamalPantIPS @SonuSood pic.twitter.com/i5rpqr20Uc
— Basavanagar Residential Welfare Association (@basvanagar) January 2, 2023
இதையடுத்து, கல்லூரி காவலாளிகள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், மாணவி முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மாணவியை குத்திவிட்டு, தற்கொலைக்கு முயன்ற பவன் கல்யாண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: College student, Crime News, Girl Murder