நாடு முழுக்க வரும் 12-ஆம் தேதி முதல் 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் அறிவித்துள்ளார். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வரும் 10-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாடு முழுக்க 230 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன; மாநில அரசுகளின் கோரிக்கையின் அடிப்படையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பயணிகள் அதிகம் பேர் காத்திருக்கும் பட்சத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
மேலும், சிறப்பு ரயில்களின் இயக்கத்தை கண்காணிக்க உள்ளதாகவும் வினோத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மத்திய அரசு வெளியிட்டுள்ள தளர்வுகளையடுத்து ரயில் சேவைகள் முழுவீச்சில் இயங்க உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways, Lockdown