பங்குச்சந்தைகள் ஒரே நாளில் 3 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்ட நிலையில், பங்குச்சந்தை திங்கட்கிழமை முதல் எழுச்சி காணும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பட்ஜெட் தாக்கலுக்குப் பின் நியூஸ் 18 குழும செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு அளித்த பேட்டியில் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என எனது உரையின் தொடக்கத்திலேயே தெரிவித்தேன், மேலும் தேவை ஏற்பட்டால் உடனடியாக முதலீடு செய்வேன் எனவும் அறிவித்தேன்.
தயாராக உள்ள முதலீட்டு திட்டங்கள் குறித்த எண்ணிக்கைகள் தெளிவாக இருந்தன. கட்டமைப்பில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு 22,000 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் பங்குச்சந்தைகள் சரியாக செயல்படவில்லை. ஆனால் திங்கட்கிழமை பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு என்னென்ன சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதை கண்டிப்பாக புரிந்துக்கொள்வார்கள்.
பங்கு பத்திரங்களை வலிமைப்படுத்த நான் அளித்துள்ள சலுகைகளை புரிந்துக்கொள்வார்கள், எனவே திங்கட்கிழமை சந்தைகள் லாபத்தில் செயல்படும்” என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.