கேரளாவில் சிறுத்தையை வேட்டையாடி கொன்று, சமைத்த உண்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் என்பவரது தலைமையிலான 5 பேர் முனிபாரா வனப்பகுதியில், உள்ள தோட்டத்தில் பொறி வைத்து 50 கிலோ எடை கொண்ட 6 வயது சிறுத்தையை பிடித்துள்ளனர். அங்கிருந்து, அதனை அடித்துக் கொன்ற அவர்கள் வீட்டிற்கு கொண்டு சென்று சமைத்து உண்டுள்ளனர்.
இதுதொடர்பாக கிடைத்த தகவலின் பேரில், வினோதின் வீட்டிற்கு சென்ற வனத்துறையினர் 5 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடமிருந்து, சிறுத்தையின் 10 கிலோ இறைச்சி, அதன் பல் மற்றும் தோல் ஆகியவை மீட்கப்பட்டது. பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகள் பட்டியலில் உள்ள சிறுத்தையை கொன்ற 5 பேருக்கும், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.