மஹாராஷ்டிராவில் தேர்தலுக்கு முன் பேசப்பட்ட 50-50 பார்முலா படி, முதலமைச்சர் பதவியை சிவசேனாவுக்கு கொடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்.
மஹாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா இணைந்து தேர்தலை சந்தித்தது. இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், அங்கு பாஜக கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.
தற்போது வரை பாஜக 100 இடங்களிலும், சிவசேனா 61 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் கூட்டனி 98 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
சிவசேனாவின் இளைஞரணி தலைவர் ஆதித்யா தாக்கரே இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி முன்னிலையில் இருக்கும் நிலையில், அவரை முதல்வராக்க இப்போதே அக்கட்சி காய் நகர்த்த தொடங்கியுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத், தேர்தலுக்கு முன் பேசப்பட்ட 50-50 பார்முலா படி, முதலமைச்சர் பதவியை சிவசேனாவுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதன்படி, 2.5 ஆண்டுகள் பாஜக சார்பில் ஒருவர் முதல்வராகவும், அடுத்த 2.5 ஆண்டுகள் சிவசேனா சார்பில் ஒருவர் முதல்வராகவும் (ஆதித்யா தாக்கரே) இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், சிவசேனாவின் இந்த கருத்துக்கு பாஜக தரப்பில் இருந்து பதில் எதுவும் அளிக்கப்படவில்லை. அணி மாறும் பேச்சுக்கு இடமில்லை என்றும் சிவசேனா கூறியுள்ளது பாஜக தரப்புக்கு நிம்மதி அளித்துள்ளது.
Published by:Sankar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.