ரிலையன்ஸ் ஜியோவின் 9.99% பங்குகளை, 43,574 கோடிகளுக்கு சமூக வலைதள பெருநிறுவனமான ஃபேஸ்புக் வாங்கியுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தின், தொலைதொடர்புப் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ, 9.99% பங்குகளை அமெரிக்க சமூகவலைதள பெருநிறுவனமான ஃபேஸ்புக்குக்கு $5.7 billion., அதாவது 43,574 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. இதன்மூலம், ஜியோ தளங்களின் மிகப்பெரிய மைனாரிட்டி பங்குதாரராக உருவெடுத்துள்ளது ஃபேஸ்புக். இதன்மூலம் வேகமாக வளர்ந்து வரும் இந்திய சந்தையில் இன்னும் அழுத்தமாக கால் பதிக்கவிருக்கிறது ஃபேஸ்புக்.
ரிலையன்ஸ் ஜியோ - ஃபேஸ்புக் ஒப்பந்தம், இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் பயணத்தின் தொடக்கமாக இருக்கலாம். Paytm மற்றும் PhonePe போன்ற நிறுவனங்களுக்கு ஒரு போட்டியாளராக விளங்கலாம். ஃபேஸ்புக், சோதனை நிலையில் இருக்கும் தன்னுடைய வாட்ஸ்-அப் அப்ளிகேஷன் வழியாக பணம் அனுப்பும் செயல்பாட்டில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இந்த ஃபேஸ்புக் - ஜியோ ஒப்பந்தத்தின் வழியாக, ஒரு காப்பீட்டுக் கொள்கை போன்றதாக இந்த ஒப்பந்தம் மாறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக வாட்சப் பேவை மேலும் சிறந்ததாக மாற்ற முடியும் என வங்கி உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ரிலையன்ஸ் - ஃபேஸ்புக் ஒப்பந்தத்துக்கு முன்னதாகவே வாட்சப் பே, பே டிஎம், ஃபோன் பே போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாளராக மாறும் என பல நிதித்துறை நிபுணர்கள் தெரிவித்திருந்த நிலையில் இந்த ஒப்பந்தம் அதற்கு கூடுதலாக வலுசேர்க்கும் என கருதப்படுகிறது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.