கோவா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் தொங்கு சட்டமன்றம் அமையும் வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்த நிலையில் பாஜக பெரும்பான்மையை நெருங்கி வருகிறது. அதே நேரத்தில் கோவா முதல்வரான பிரமோத் சாவந்த் பின்னடைவை சந்தித்துள்ளார்.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவாவில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 40 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட கோவாவில் காங்கிரஸும் வலுவான எதிர்கட்சியாக உள்ளது. இங்கு பா.ஜ.க, காங்கிரஸ் இடையே நேரடிப்போட்டி நிலவுகிறது.
சட்டமன்றத் தேர்தலில் தொங்கு சட்டமன்றம் அமையும் வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன. தற்போதைய வாக்கு எண்ணிக்கையில், இழுபறி ஏற்படும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் கோவா மாநிலத்தில் பெரும்பான்மையை பாஜக நெருங்கி வருகிறது. காலை 10.47 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 19 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. 15 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி ஒன்று, திரிணாமுல் காங்கிரஸ் இரண்டு, மற்றவர்கள் மூன்று இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.