உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்கள் சச்சின், விராட் கோலி ஆகியோரை நீங்கள் உற்சாகப்படுத்துகிறீர்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்திறங்கிய ட்ரம்பை, பிரதமர் மோடி சென்று வரவேற்றார். அங்கிருந்து 22 கி.மீ தூரத்துக்கு சாலை வழியாக சபர்மதி காந்தி ஆசிரமத்துக்கு இருவரும் சென்றனர். பின்னர், உலகின்மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொதேரா மைனாத்தை திறந்துவைத்தார்.
பின்னர், நமஸ்தே ட்ரம்ப் என்ற நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானவர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உருவாகியுள்ளது.விரைவில், உலகின் மிகப் பெரிய நடுத்தரவர்க்கத்தினரின் இல்லமாக மாறும். இந்தியா கற்பனைத் திறனின் தலைமையிடமாக திகழ்கிறது.
ஆண்டுக்கு 2,000 பாலிவுட் திரைப்படங்கள் உருவாகின்றன. பங்க்ரா, டி.டி.எல்.ஜே, சோலே உள்ளிட்ட படங்கள் உலகம் முழுவதும் வாழும் மக்களின் விருப்பமான படமாக இருக்கின்றன. நீங்கள் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களாக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரை உற்சாகப்படுத்துகிறீர்கள்’ என்று தெரிவித்தார்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.