பத்ம விருதுகளைப் பெற்றவர்கள் அவர்களது பெயர்களுக்கு பின்னால் விருதுகளைப் பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
பல்வேறு துறைகளில் சிறந்த விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசால் பத்ம விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்தநிலையில் மக்களவையில் பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் பயன்படுத்தலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு மத்திய இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் எழுத்துப் பூர்வமாக பதிலளித்தார்.
அதில், ‘பாரத ரத்னா, பதம் விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய மத்திய அரசால் வழங்கப்படும் விருதுகளை அரசியல்சாசன விதிகள் 18(1)-ன்படி, விருது பெற்றவர்கள் அவர்களுடைய பெயருக்கு முன்னாலோ, பின்னாலோ எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது. அப்படி, தவறாக பயன்படுத்தினால் விருது பெற்றவர் அந்த உரிமையை இழந்தவர் ஆகிறார்.
குடியரசுத் தலைவர் அவர்களின் விருதுகளை ரத்து செய்யவோ, நீக்கவோ முடியும். விருது பெற்றவர்களின் பெயர்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும். எனவே, விருது பெற்றவர்கள் அவர்களது பெயர்களை பெயருக்கு முன்னாலோ பின்னாலோ சேர்க்கக் கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Also see:
Published by:Karthick S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.