பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்றபட்டுள்ளதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் தடை விதிக்கபட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் கலந்துகொண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய கேரளா, தமிழகம், ஆந்திராஉள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். கார்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து சபரிமலை அய்யப்பன் கோவிலில் மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தனம் திட்டா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. இதனையடுத்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீர் திறப்பால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக பம்பை பகுதியில் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோவிலுக்கு செல்ல இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது. பம்பை ஆற்றில் தண்ணீர் குறையும் போது முன் பதிவின் அடிப்படையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுவதாக பத்தனம் திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா அறவிப்பு வெளியிட்டுள்ளார்.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.