முகப்பு /செய்தி /இந்தியா / டெல்லியை அச்சுறுத்தும் டெங்கு... நவம்பரில் மட்டும் 5,600 பேருக்கு பாதிப்பு

டெல்லியை அச்சுறுத்தும் டெங்கு... நவம்பரில் மட்டும் 5,600 பேருக்கு பாதிப்பு

டெங்கு காய்ச்சல் : தனிப்பட்ட முறையில், கோவிட் பாதிப்பு அடையாதவர்களையும் டெங்கு தாக்கினாலும், கோவிட் தொற்றின் பிந்தைய பாதிப்பாக, டெங்குவின் தாக்கம் தீவிரமாகவே இருந்தது. லேசான காய்ச்சல் முதல் டெங்கு ஷாக் சிண்ட்ரோம் வரை, கொசுக்களால் உண்டான பாதிப்பு மிகவும் அதிகம். டெங்கு காய்ச்சல் லேசாக இருக்கும் போது, சொறி, அரிப்பு, தசை மற்றும் மூட்டு வலி, வாந்தி மற்றும் தலைவலி ஏற்படும். இது தீவிரமாகும் போது, வாய், மூக்கு, ஈறுகளில் இருந்து ரத்தக்கசிவு, பிளேட்லட்கள் குறைவது, உடலுக்குள் ரத்தக்கசிவு, கடுமையான வயிற்று வலி மற்றும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வலிப்பு உள்ளிட்டவை அறிகுறிகள் தோன்றும். டெங்கு ஷாக் சிண்ட்ரோம் உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு கடுமையான தாக்கத்தை உண்டாக்கும். மேலே கூறிய அறிகுறிகளுடன், மனநல பாதிப்பும், மூளை வீக்கமும் ஏற்படலாம்.

டெங்கு காய்ச்சல் : தனிப்பட்ட முறையில், கோவிட் பாதிப்பு அடையாதவர்களையும் டெங்கு தாக்கினாலும், கோவிட் தொற்றின் பிந்தைய பாதிப்பாக, டெங்குவின் தாக்கம் தீவிரமாகவே இருந்தது. லேசான காய்ச்சல் முதல் டெங்கு ஷாக் சிண்ட்ரோம் வரை, கொசுக்களால் உண்டான பாதிப்பு மிகவும் அதிகம். டெங்கு காய்ச்சல் லேசாக இருக்கும் போது, சொறி, அரிப்பு, தசை மற்றும் மூட்டு வலி, வாந்தி மற்றும் தலைவலி ஏற்படும். இது தீவிரமாகும் போது, வாய், மூக்கு, ஈறுகளில் இருந்து ரத்தக்கசிவு, பிளேட்லட்கள் குறைவது, உடலுக்குள் ரத்தக்கசிவு, கடுமையான வயிற்று வலி மற்றும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வலிப்பு உள்ளிட்டவை அறிகுறிகள் தோன்றும். டெங்கு ஷாக் சிண்ட்ரோம் உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு கடுமையான தாக்கத்தை உண்டாக்கும். மேலே கூறிய அறிகுறிகளுடன், மனநல பாதிப்பும், மூளை வீக்கமும் ஏற்படலாம்.

காய்ச்சல் கண்டவுடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும். மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை அறவே கைவிட வேண்டும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

டெல்லியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பணிசமாக அதிகத்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நவம்பர் மாதத்தில் மட்டும் 5,600 பேருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 7,100 பேர் டெங்குவுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

நவம்பர் 15 -ம்தேதி நிலவரப்படி டெல்லியில், 5,277 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த 2015-க்கு பின்னர் பதிவான மிகப்பெரிய பாதிப்பு என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 1,850 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இதனால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று அரசு கூறியுள்ளது.

2015-ல்தான் மிகப்பெரிய அளவில் டெங்கு பாதிப்பை டெல்லி எதிர்கொண்டது. அந்த ஆண்டில் மட்டும் 10,600 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

டெங்கு காய்ச்சல் யாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை. டெங்கு தொற்று பரவலானது லேசான அறிகுறிகளை ஏற்படுத்துவதால், மக்கள் பொதுவாக வீட்டிலேயே சிகிச்சை பெற விரும்புவார்கள். இருப்பினும், டெங்கு தொற்று கடுமையான திருப்பத்தை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெங்கு ஏற்பட்டாலே உயிரிழப்பு ஏற்படும்  என்று கூறிவிட முடியாது. டெங்கு காய்ச்சலை முழுமையாக குணப்படுத்த முடியும். ஏடிஸ் என்ற கொசுவால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது. இந்த கொசு நல்ல தண்ணீரில் மட்டுமே உருவாகி, பகலில் மட்டுமே கடிக்கக் கூடியது.

பொதுமக்கள் தண்ணீர் சேமித்து வைத்துள்ள குடங்கள், சிமென்ட் தொட்டிகள், டிரம்கள் போன்றவற்றை கொசு புகாதவகையில் மூடி வைக்க வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒரு முறை பிளிச்சிங் பவுடர் கொண்டு நன்றாகத் தேய்த்து கழுவி கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும். மேலும் தங்கள் வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளில் கிடக்கும் பழைய டயர். தேங்காய் சிரட்டை, ஆட்டுக்கல், பிளாஸ்டிக் கப், பெயிண்ட் டப்பா போன்றவற்றை அகற்றிட வேண்டும்.

காய்ச்சல் கண்டவுடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும். மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை அறவே கைவிட வேண்டும். பகலிலும் சிறு குழந்தைகளை கொசு வலைக்குள் தூங்க வைக்க வேண்டும். இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.

First published:

Tags: Dengue, Dengue fever