டெல்லியில் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கணவனை அவரது மனைவி, மகன் உதவியுடன் கொலை செய்து உடலை 22 துண்டுகளாக வெட்டி வீசியுள்ளார் . டெல்லியை உலுக்கிய மற்றொரு படுகொலையின் பின்னணி என்ன?
டெல்லியில் ஷ்ரத்தா என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப் அமீன், கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு பகுதிகளில் வீசிய கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதே போன்று டெல்லியில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கணவனை, மகன் உதவியுடன் கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை டெல்லி முழுவதும் வீசியுள்ளார் மனைவி. தொடரும் டெல்லி படுகொலைகள் பின்னணி என்ன? டெல்லியில் ஷ்ரத்தா கொலை வழக்கு விசாரணையில், அவரது உடல் பாகங்கள் இன்னும் தேடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பாண்டவ் நகரில் சில உடல் உறுப்புகளை போலீஸார் கண்டுபிடித்தனர். அது ஷ்ரத்தாவின் உடல் உறுப்புகளாக இருக்கலாம் என சந்தேகமடைந்த போலீசார், பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அப்போது அது ஷ்ரத்தா உடல் உறுப்புகள் இல்லை என்பது தெரியவந்தது.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பாண்டவ் நகரில் கிடந்த உடல் உறுப்புகள் அப்பகுதியில் வசித்து வந்த அஞ்சான்தாஸ் என்பவருடையது என கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
டெல்லி கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் பாண்டவ நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சன்தாஸ். இவரது மனைவி பூனம். இந்த தம்பதியின் மகன் தீபக். அஞ்சன்தாசுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மனைவி பூனம் பலமுறை சொல்லியும் அவர் தகாத உறவை கைவிடவில்லை எனத் தெரிகிறது. இதனால் வெறுத்துப் போன பூனம் கணவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார் மகனுடன் சேர்ந்து திட்டம் தீட்டிய பூனம், கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து, மகனை வைத்து கொலை செய்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. கணவரின் உடலை மறைக்க திட்டமிட்ட தாயும், மகனும் உடலை 22 துண்டுகளாக வெட்டியுள்ளனர். வெட்டப்பட்ட உடல் பாகங்களை பிரிட்ஜில் வைத்து பாதுகாத்துள்ளனர். உடல் துண்டுகளை சிறிது சிறிதாக கிழக்கு டெல்லி பகுதியில் நாள்தோறும் சென்று வீசியது விசாரணையில் தெரியவந்தது.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் தீபக் நள்ளிரவில் ஒரு பையுடன் செல்வதும், அவருக்கு பின்னால் அவரது தாயார் பூனம் செல்வதும் பதிவாகி இருந்தது. குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஷ்ரத்தா கொலையில் உடல் பாகங்களை தேடப் போன போலீசாருக்கு அதே போன்று மற்றொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது தெரியவந்ததையடுத்து, இதுபோன்று மேலும் பல கொலைகள் நிகழ்த்தப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Delhi, Murder