இந்தியாவில் கொரோனா நான்காம் அலை ஓயாத நிலையில், டெல்லியில் முகக்கவசம் மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான டெல்லி அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், அலுவலகம், பூங்கா போன்ற பொது இடங்களில் முகக்கவசம் அணியவில்லை என்றால் இனி சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். எனவே, இனி பொது இடத்தில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, தனது சொந்த காரில் பயணம் செய்பவர்களுக்கு இந்த அபராதம் பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் மீண்டும் கொரோனா பாதிப்பு வெகுவாக தலைதூக்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2,146 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தொற்று பரவலை குறிக்கும் டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் 18 சதவீதத்தை நெருங்கியுள்ளது. மேலும், 180 நாள்களில் இல்லாத வகையில் நேற்றைய உயிரிழப்பு 8 ஆக பதிவாகியுள்ளது.
டெல்லியில் கொரோனா பாதிப்பு உயர்வு குறித்து லோக்நாயக் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் சுரேஷ் குமார் கூறுகையில், உருமாறிய தொற்று பரவல் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதேவேளை, அனைவரும் தடுப்பூசி செலுத்தியுள்ளதால் பாதிப்பின் தீவிரம் குறைந்து காணப்படுகிறது. எனவே, பெரும்பாலானோருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவதில்லை என அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நன்றி அண்ணா.. பீகாரில் ஆட்சி மாற்றம் - ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன தேஜஸ்வி யாதவ்
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 16,299 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி 1,25,076 பேர் கோவிட் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் நேற்று 54 உயிரிழப்புகள் பதிவான நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,26,879 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Mask, Delhi, Government