டெல்லியில் மதுபானக் கொள்கை திரும்ப பெறப்பட்ட விவாகரத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் தனிப்பட்ட உதவியாளரும் சிக்கினார். இந்த வழக்கில் 15 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து டெல்லி ஆத்மி அரசுக்கும் பாஜகவிற்கும் மோதல்போக்கு நிலவியது.
இந்நிலையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தனது அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடைபெற்றுவருவதாக அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று மீண்டும் சிபிஐ என அலுவலகத்துக்கு வந்தார்கள். என் வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை செய்தார்கள். என் லாக்கரை சோதித்தார்கள். மேலும் என் கிராமத்திலும் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். ஆனால் எனக்கு எதிராக எதுவும் கண்டுபிடிக்கவில்லை. காரணம் நான் எந்தத் தவறும் செய்யவில்லை”என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே சிபிஐ ரெய்டு நடைபெற்றபோது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜகவின் தூண்டுதல் காரணமாகவே சிபிஐ இந்த ரெய்டை நடத்தியிருக்கிறது என்றார். மேலும் கடந்த ஒரு மாதமாக 1000 கணக்கான அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால் அவர்களால் எதையும் கண்டுபிடிக்கவில்லை என்றும் அவர் பேசியிருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aam Aadmi Party, Arvind Kejriwal, CBI