கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், ஆண் செவிலியரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண் அன்றையே தினமே பரிதாபமாக உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவல் நேரத்தில் முன்கள பணியாளர்களான மருத்துவர்களும், செவிலியர்களுமே சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குகின்றனர். இருப்பினும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக கொரோனா சிகிச்சையில் இருந்த பெண்ணை, ஆண் செவிலியர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்து அன்றைய தினமே அப்பெண் உயிரிழந்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன் நடைபெற்ற இச்சம்பவம் தற்போது ஆண் செவிலியரின் கைதுக்கு பின்னரே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த 43 வயது பெண் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் போபால் அரசு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஏப்ரல் 6ம் தேதி 40 வயதாகும் சந்தோஷ் ஆஹிர்வார் என்ற ஆண் செவிலியர் ஒருவர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக மருத்துவர் ஒருவரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார் அப்பெண். அன்றைய தினம் மாலையே அவரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
Read More: திகார் சிறையில் மருத்துவராக பணியாற்ற அனுமதிக்க கோரி அல் கொய்தா இயக்கத்தைச் சேர்ந்தவர் மனு!
மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் நிஷத்புரா காவல்நிலையத்தில் செவிலியர் சந்தோஷ் ஆஹிர்வார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உயிரிழக்கும் முன் மருத்துவர்களிடம் தன்னைப் பற்றிய தகவல்களை வெளியில் கூறிவிட வேண்டாம் என்று அப்பெண் வேண்டுகோள் வைத்ததால் அப்பெண் குறித்த எந்த தகவலையும் காவல்துறையினர் வெளிப்படுத்தவில்லை.
மேலும் பணி நேரத்தில் அவர் குடித்துவிட்டு சக பெண் செவிலியர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக ஏற்கனவே சந்தோஷ் ஆஹிர்வார் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டார் என கூறப்படுகிறது.
பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி உயிரிழந்த பெண் 1984ம் ஆண்டு போபால் விஷவாயு கசிவு சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போபால் விஷவாயு கசிவில் சம்பவத்தில் இருந்து பிழைந்து உயிர்வாழ்பவர்கள் பிறரைக் காட்டிலும் கொரோனாவால் 7 மடங்கு உயிரிழக்கக் கூடிய ஆபத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bhopal, Corona, COVID-19 Second Wave, Crime | குற்றச் செய்திகள், Rape