முகப்பு /செய்தி /இந்தியா / கைதிகள் மனைவியுடன் தனி அறையில் 2 மணிநேரம் செலவிட அனுமதி.. பஞ்சாப் அரசு அறிவிப்பு

கைதிகள் மனைவியுடன் தனி அறையில் 2 மணிநேரம் செலவிட அனுமதி.. பஞ்சாப் அரசு அறிவிப்பு

திட்டம் மற்ற சிறைகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

திட்டம் மற்ற சிறைகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

conjugal visit: திட்டத்திற்கு கைதிகள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. பரிவார் முலாகத் என இந்த திட்டத்திற்கு பெயர் வைத்துள்ளார்கள். இதற்கு குடும்ப வருகை என்று பொருள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நன்னடத்தை கைதிகளுக்கு மனைவியுடன் தனி அறையில் 2 மணி நேரம் செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில்தான் கைதிகளுகக்கான இந்த சலுகை அறவிக்கப்பட்டுள்ளது. முதல் முயற்சியாக நேற்று முன்தினம் நன்னடத்தை கொண்ட கைதிகள் 2 மணிநேரம் வரை தனி அறையில் தங்கள் மனைவிகளுடன் நேரத்தை செலவிட அனுமதிக்கப்பட்டனர்.

தர்ன் தரனில் உள்ள கோயிண்ட்வால் சாஹிப் மத்திய சிறை, நபாவில் உள்ள புதிய மாவட்ட சிறை மற்றும் பதிண்டாவில் உள்ள பெண்கள் சிறை ஆகிய  3 பஞ்சாப் சிறைகளில் சோதனை முயற்சி இந்நடைமுறை தொடங்கப்பட்டது.

இந்த திட்டம் அடுத்தகட்டமாக மற்ற சிறையிலிருக்கும் கைதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என பஞ்சாப் காவல்துறை சிறப்பு இயக்குனர் ஹர்ப்ரீத் சிங் சித்து கூறியுள்ளார். இந்த திட்டத்திற்கு கைதிகள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.  பரிவார் முலாகத் என இந்த திட்டத்திற்கு பெயர் வைத்துள்ளார்கள். இதற்கு குடும்ப வருகை என்று பொருள்.

நாடு முழுவதும் நடைபெறும் என்.ஐ.ஏ சோதனையில் 100 பேர் வரை கைது

முதலில் இந்த திட்டத்தின் மூலம், தங்களது நேசத்திற்குரியவர்களை ஒரு மணி நேரம் மட்டுமே சந்தித்து பேச முடியும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் 2 மணி நேரமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கைதிகளின் நன்னடத்தையை அதிகப்படுத்தும், குடும்ப உறவுகளை வலுப்படுத்தும், சிறைகளில் ஒட்டுமொத்த சூழல் அமைப்பை மேம்படுத்தும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலேயே கைதிகளுக்கு அவர்களது மனைவி அல்லது கணவர் உடன் 2 மணிநேரம் தனியறையில் சந்தித்துக்கொள்ளும் அனுமதி, பஞ்சாப்பில் மட்டுமே முதன்முறையாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கடுமையான குற்றம் செய்தவர்கள், தீவிரவாதிகள், எச்.ஐ.வி போன்ற தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்? அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல்! யாருக்கு வெற்றி?

top videos

    அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்ஸ், பாகிஸ்தான், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் இதுபோன்ற திட்டம் நடைமுறையில் இருக்கிறது.

    First published:

    Tags: Jail, Prisoner, Punjab