ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல்களை நடத்தியதாக காங்கிரஸ் கட்சி பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பல முறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனை ஆதாயத்துக்காக பயன்படுத்தவில்லை என்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, துல்லியத் தாக்குதல் நடத்தினோம் என்று காகிதத்தில் எழுதும்போது, 6 முறை அல்ல 25 முறை என்று கூட எழுதலாம் என்று கூறினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து எவ்வாறு யாருக்கும் தெரியாமல் போனது என்று அவர் கேள்வி எழுப்பினார். 6 முறை தாக்குதல் நடத்தியதாக காங்கிரஸ் கூறும் நிலையில், இதுகுறித்து தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தானுக்கு தெரியாது என்றும், இந்தியர்களுக்கு கூட தெரியாது என்றும் நரேந்திர மோடி கூறினார்.
தன் மீது மக்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துவதைப் பார்த்து, தாங்களும் செய்தோம் என்று காங்கிரஸ் கட்சி கூறி வருவதாக நரேந்திர மோடி விமர்சனம் செய்தார்.
Also see... பிரியங்கா இன்னொரு இந்திரா?
Also see... வெயிலின் தாக்கத்திலிருந்து தென்னங்கன்றுகளை எப்படி பாதுகாப்பது?
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.