சண்டே தாட்ஸ் என்ற ஹேஷ்டேக் மூலம் பிரதமர் மோடியை ட்விட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளை மூட உள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு அறிவித்துள்ளது. சென்னை மறைமலை நகரிலும் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் உள்ள கார் தயாரிப்புப் ஆலைகளை மூடப்போவதாக அறிவித்துள்ளது. இந்திய சந்தையில் ஃபோர்டு நிறுவனத்தின் கார் விற்பனை சரிவை நோக்கி சென்றதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்தது.
இந்தப்பத்திரிக்கை செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி 'சண்டே தாட்ஸ்'என்ற ஹேஷ்டேக்கில் பாஜகவையும், பிரதமர் மோடியையும் விமர்சித்து பதிவிட்டுள்ளார். அவர் பகிர்ந்துள்ள செய்தியில், “ ஃபோர்ட் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுவதால் 4000 சிறு நிறுவனங்கள் மூடப்படும் என தொழிற்துறையினர் கூறியிருக்கும் செய்தி அதில் இடம்பெற்றுள்ளது.
சண்டே தாட்ஸ் என்ற ஹேஷ்டேக்கில் ராகுல் காந்தி, “ வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைக்கு, வேலை நாளான திங்கட்கிழமைக்கும் இடையிலான வித்தியாசத்தை முடிவுக்கு கொண்டு வந்தது தான் மோடி ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி. வேலையே இல்லாத போது அது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் என்ன திங்கட்கிழமையாக இருந்தால் என்ன என்று பாஜக அரசை விமர்சித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.