நிவர் புயல் பாதிப்பால் ரூ.400 கோடி சேதம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல்..
நிவர் புயல் பாதிப்பால் ரூ.400 கோடி சேதம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல்..
முதலமைச்சர் நாராயணசாமி
புயல் பாதிப்பு காரணமாக பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் தடைபட்ட நிலையில், இன்று காலை 11 மணிக்குள் அனைத்து பகுதிகளுக்கும் மின்சார விநியோகம் செய்யப்படும் என முதலமைச்சர் கூறினார்.
நிவர் புயல் கோர தாண்டவத்தால் புதுச்சேரியில் 400 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.
புயல் பாதிப்பு தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”புயல் காரணமாக மனித உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை” என்றார்.
”முதல் கட்ட புயல் சேத கணக்கெடுப்பின்படி 820 ஹெக்டர் காய்கறி தோட்டங்களும், 170 ஹெக்டர் கரும்பு தோட்டங்களும், 7 ஹெக்டரில் வெற்றிலை, 50 ஹெக்டரில் வாழை தோட்டங்களும் சேதமடைந்திருப்பதாக” தெரிவித்தார்.
”புயல் பாதிப்பு காரணமாக பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் தடைபட்ட நிலையில், இன்று காலை 11 மணிக்குள் அனைத்து பகுதிகளுக்கும் மின்சார விநியோகம் செய்யப்படும்” என முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.