பிரதமர் நரேந்திர மோடி தலைமைலான மத்திய அமைச்சரவை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்ப்பட்டுள்ளது.
தற்போது வரை அகவிலைப்படி 9 சதவீதமாக இருந்து வந்தது. அதை 3 சதவீதம் உயர்த்தி 12 சதவீதமாக அறிவித்துள்ளனர். அகவிலைப்படி உயர்வு 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் ஒரு கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 9,000 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.
2018 மார்ச் மாதம் 5 சதவீதமாக இருந்து வந்த அகவிலைப்படி 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பின்னர் 2018 ஜூலை மாதம் மீண்டும் அகவிலைப்படி 2 சதவீதமாக உயர்த்தப்பட்டு 9 சதவீதமாக அறிவிக்கப்பட்டது.
அகவிலைப்படி என்பது விலை ஏற்றம் அதிகரிக்கும்போது அரசு ஊழியர்கள் அவற்றைச் சமாளிக்க வழங்கப்படுவது ஆகும். இந்த அகவிலைப்படியானது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே வழங்கப்படுகிறது.
மறுபக்கம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கங்கள் அடிப்படை ஊதியத்தை 26,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகிறனர்.
மேலும் பார்க்க: பாகிஸ்தான் பொருட்களுக்கு வரி 200% ஆக உயர்வு - அருண் ஜெட்லி அதிரடி
Published by:Tamilarasu J
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.