இந்தியாவில் பயன்படுத்தியது போக மீதமுள்ள கொரோனா தடுப்பூசியை அடுத்த மாதம் முதல் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் தற்போது செலுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் மருந்து நிறுவனமும், கோவேக்சின் தடுப்பூசியை ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும் தயாரிக்கின்றன. இதில், சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி பிரிட்டனின் அஸ்ட்ரா ஜெனிக்கா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பு ஆகும்.
இந்நிலையில், உள்நாட்டு தேவை போக, உபரியாக இருக்கும் மருந்துகளை மற்ற நாடுகளுக்கும் சீரம் நிறுவனம் ஏற்றுமதி செய்து வந்தது. பொருளாதாரத்தில் நலிவடைந்த 64 நாடுகளுக்கு இந்த மருந்துகளை இந்தியா அனுப்பியது. இந்தியாவில் மார்ச் மாதம் கொரோனா 2ஆவது அலை தொடங்கியது. ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் அதிகரித்ததால் தடுப்பூசிகள் செலுத்தும் பணியை அரசு தீவிரப்படுத்தியது.
கொரோனா பரவல் அதிகரிப்பதால் இந்தியாவிற்கு கொரோனா தடுப்பு மருந்துகள் கணிசமாக தேவைப்படும் என்பதால் தடுப்பு மருந்து ஏற்றுமதியை ஏப்ரல் மாதத்தில் இந்தியா முற்றிலுமாக நிறுத்தியது. இந்நிலையில், இந்தியாவில் பயன்படுத்தியது போக மீதம் இருக்கும் தடுப்பூசி மருந்தை அடுத்த மாதம் முதல் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை திட்டமிட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய ஆகிய நாடுகள் பங்கேற்கும் குவாட் நாடுகளின் உச்சி மாநாட்டில் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதற்கு முன்னதாக கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Must Read : நீட் தேர்வு பாடத்திட்டம் : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் 94.4 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு விரும்புகிறது, இதுவரை இந்த வயது பிரிவினரில் 61 சதவிகிதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.