பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மீது புதிய வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ, அவருக்கு தொடர்புடைய 17 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.
டெல்லி, பாட்னா, கோபால்கஞ்ச் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் சிபிஐ சோதனை நடந்து வருகிறது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
ரயில்வேயில் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்களிடமிருந்து நிலத்தைப் பெற்று மோசடி செய்ததாக லாலு பிரசாத் யாதவ் மீதும் அவரது மகள் மீதும் புதிய வழக்கு பதியப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பாட்னாவில் உள்ள அவரது மனைவி ரப்ரி தேவி வீட்டின் முன் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 73 வயதான லாலு பிரசாத் யாதவ் தன் மீதான ஐந்தாவது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் அண்மையில் ஜாமின் பெற்றார்.
Also read... சென்னையில் தந்தையை கொன்று துண்டு, துண்டாக வெட்டிய மகன் - விலைக்கு இடம் வாங்கி சடலத்தை புதைத்த கொடூரம்
ஆனாலும், உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CBI, Lalu prasad yadav