பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதலமைச்சராக ராஷ்டிரியா ஜனதாதளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் உள்ளார். இந்நிலையில் தேஜஸ்வியின் தந்தையும் பீகாரின் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் மீதான ஊழல் புகாரில் அவரது குடும்பத்தாருக்கு நெருக்கடி வலுத்துள்ளது.
2004-2009 ஆண்டுகளில் லாலு பிரசாத் யாதவ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது ஒருவர் நிலம் வழங்கினால் அவருக்கு இந்திய ரயில்வேயில் அரசு வேலை தரப்படும் என ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக லாலு யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரின் வீடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இந்த ஊழல் வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக தேஜஸ்வி யாதவிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே, பிப்ரவரி 4ஆம் தேதி அன்று தேஜஸ்வி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அவர் வராத நிலையில், மீண்டும் மார்ச் 15ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bihar, CBI, Lalu Prasad Yadav