மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்ததற்காக என்னை கொலை செய்ய முயற்சித்தார்கள், என்னை போல மேலும் 250 பேர் மேற்குவங்கத்தில் இருந்து தப்பித்து வந்து அசாமில் பதுங்கியிருப்பதாக 40 வயதுடையவர் கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாநிலமாக இருந்தது மேற்குவங்கம் தான். அங்கு ஆட்சியை பிடிக்கும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வந்த பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்து தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைத்துள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி.
இதனிடையே தேர்தல் முடிவுகள் வெளியான மே 2ம் தேதியில் இருந்து மேற்குவங்கத்தின் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக தகவல்கள் வெளிவந்தன. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஆவேசமடைந்து பாஜக கட்சி அலுவலகத்தை தீயிட்டு கொளுத்தினர். அவர்கள் பாஜக தொண்டர்களை அடித்து, காயப்படுத்தி வருவதாக பரவலாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் மாநில அரசிடம் வன்முறை சம்பவங்கள் குறித்து ஆளுநர் அறிக்கை கேட்டுள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மேல்மட்ட தலைவர்கள் நிலைமையை நேரில் கண்டறிவதற்காக மேற்குவங்கம் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மேற்குவங்கத்தின் கூச் பெகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர் பாஜகவுக்கு வாக்களித்ததால் தன்னை கொலை செய்ய முயற்சித்தார்கள் என கூறியுள்ளார்..
மேற்குவங்க மாநிலம் துஃபன்கஞ்ச் தொகுதிக்குட்பட்ட ஜவுகுதி கிராமத்தைச் சேந்தவர் 40 வயதாகும் மேகு தாஸ்.இவருடைய தாயார் கடந்த வாரம் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கடந்த செவ்வாயன்று காலை மேகு தாஸை ஒரு கும்பல் தேடி வந்துள்ளது. அவர்கள் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்தவர்கள் என்றும் தான் பாஜகவுக்கு வாக்களித்ததால் என்னை தேடி வந்து தாக்கியதாகவும் தெரிவித்தார். இருப்பினும் அவர்கள் பிடியில் சிக்காமல் அருகாமையில் உள்ள அசாமின் துப்ரி மாவட்டத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார். இவர் தற்போது மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து தந்துள்ள இடத்தில் அகதியாக வசித்து வருவதாகவும் அவர் வசிக்குமிடத்தில் மட்டும் தன்னை போல 250 பேர் இருப்பதாகவும் கூறுகிறார்.
மேற்குவங்கத்தில் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களால் அண்டை மாநிலமான அசாமில் 2000 பேர் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mamata banerjee, TMC, Violence, West Bengal Assembly Election 2021