மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு இரண்டு தலை, மூன்று கைகளுடன் குழந்தை பிறந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் ஷாஹின் பகுதியை சேர்ந்தவர் ஜாவ்ரா, இவருக்கு இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் குழந்தை பிறந்துள்ளது. மூன்றாவது கையானது, குழந்தையின் இரண்டு தலைகளுக்கும் இடையே உள்ளது.
இதைத்தொடர்ந்து, சிறிது நேரம் ரத்லாம் குழந்தைகள் மருத்துவனையில் உள்ள சிறப்பு குழந்தைகள் பிரிவில் சிறிது நேரம் வைக்கப்பட்டிருந்த அந்த குழந்தை மேல்சிகிச்சைக்காக இந்தூர் மஹாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, குழந்தை வயிற்றுக்குள் இருந்த போது செய்த சோதனையில் இரட்டையர்கள் போன்றே தெரிந்துள்ளது. இதுதொடர்பாக நாவித் குரோஷி கூறும்போது, குழந்தையின் நிலமை கவலைக்கிடமாகவே உள்ளது. இதுபோன்ற நிலையில், பெரும்பாலான குழந்தைகள் கருவிலே உயிரிழந்துவிடும், அல்லது பிறந்து 48 மணி நேரத்தில் உயிரிழந்துவிடும்.
25 வயது இளம்பெண்ணை மணந்த 45 வயது நபருக்கு நேர்ந்த சோகம்!
இதுபோன்ற நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யவும் வாய்ப்புகள் உள்ளது. எனினும், 60 முதல் 70 சதவீத குழந்தைகள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறுகிறார்.
தற்போது குழந்தையின் தாய் ரத்லாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குழந்தை மட்டும், இந்தூர் மஹாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து, அந்த குழந்தை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.