கன்னியாஸ்திரிகள் மீது சிலர் புகார் தெரிவித்தனர். இதன்காரணமாக போலீஸார் தங்களது கடமையை செய்தார்கள். புகார் சரியா? தவறா? என்று விசாரிக்க வேண்டியது போலீசாரின் கடமை என்று பியூஷ் கோயல் தெரிவித்ததற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தை இரண்டு கன்னியாஸ்திரிகள் டெல்லியில் இருந்து ஒடிசாவுக்கு ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தனர். கன்னியாஸ்திரிகளுடன் இரண்டு பெண்கள் வந்திருந்தனர். ரயில் உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியை வந்தடைந்தது. அப்போது பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த நபர்கள் மதமாற்றம் செய்பவர்கள் எனக் கூறி கன்னியாஸ்திரிகளை தாக்க முற்பட்டதாக தெரிகிறது.
இதன்காரணமாக ஜான்சி நிலையத்தில் அவர்கள் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் மதமாற்றம் செய்வதற்காக அழைத்துச் செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் அடுத்த ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறும்போது, “கன்னியாஸ்திரிகள் மீது சிலர் புகார் தெரிவித்தனர். இதன்காரணமாக போலீஸார் தங்களது கடமையை செய்தார்கள். புகார் சரியா? தவறா? என்று விசாரிக்க வேண்டியது போலீசாரின் கடமை.
இரு கன்னியாஸ்திரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் சரியான ஆவணங்கள் இருந்தது. அவர்கள் உண்மையான பயணிகள் சரியான நோக்கத்திற்காக செல்கிறார்கள் என்பதை உறுதிசெய்துக்கொண்ட காவலர்களை விசாரணைக்கு பின்னர் அவர்களை விடுவித்தனர். புகார் அளித்த நபர்கள் கன்னியாஸ்திரிகளை தாக்கியதாக கூறுவது முற்றிலும் தவறானது. அவ்வாறான சம்பவங்கள் நடைபெறவில்லை. கேரள முதல்வர் பொய்யான தகவல்களை கூறுகிறார்” என்றார்.
இதனை தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறும்போது, “'கன்னியாஸ்திரிகள் யாரும் தாக்கப்படவில்லை, அவர்களின் பயண ஆவணங்கள் மட்டும் பரிசோதிக்கப்பட்டன என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகிறார். உண்மையில் கன்னியாஸ்திரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் ஏபிவிபி அமைப்பினர். இந்த தேசத்தில் கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டுள்ளார்கள். ஒருவருக்கு இந்த தேசம் முழுவதும் செல்ல உரிமை இருக்கிறது. ஆனால், கன்னியாஸ்திரிகள் என்ற காரணத்துக்காகத் தாக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தச் செயல் வெட்கப்பட வேண்டியது. ஏபிவிபி அமைப்பினர் கன்னியாஸ்திரிகளுக்கு எதிராக நடந்துகொண்ட செயலை மத்திய அமைச்சர் நியாயப்படுத்திப் பேசுகிறார். தாக்குதலையும் நியாயப்படுத்துகிறார். இது ஆர்எஸ்எஸ் திட்டத்தை மத்தியில் ஆளும் அரசு நடைமுறைப்படுத்துகிறது என்பதற்கு அடையாளம்
மாட்டிறைச்சி விவகாரத்திலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மாட்டிறைச்சி விவகாரத்தில் முஸ்லிம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்தது.
போராட்டம் நடத்தப்பட்டும் அவர்கள் மாறியுள்ளார்களா? சில கன்னியாஸ்திரிகளைப் பார்த்தவுடன் அவர்களைத் தாக்குகிறார்கள். குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் மத்திய அமைச்சர் பேசியுள்ளார்".
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.”
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kerala, Kerala CM Pinarayi Vijayan, Piyush Goyal, Uttar pradesh