முகப்பு /செய்தி /இந்தியா / சர்ப்ரைஸ் கொடுப்பதாக கூறி நிச்சயிக்கப்பட்ட மணமகனை கொல்ல முயற்சி.. பிஹெச்டி மாணவி கைது

சர்ப்ரைஸ் கொடுப்பதாக கூறி நிச்சயிக்கப்பட்ட மணமகனை கொல்ல முயற்சி.. பிஹெச்டி மாணவி கைது

கொலை முயற்சி

கொலை முயற்சி

அலறித் துடித்த ராமகிருஷ்ணாவை பார்த்து சற்று மனம் மாறிய புஷ்பா அவரை தன்னுடைய ஸ்கூட்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். ராமகிருஷ்ணா தவறி விழுந்துவிட்டதாக புஷ்பா கூறியதை மருத்துவர்கள் நம்பவில்லை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சர்ப்ரைஸ் கொடுப்பதாக கூறி திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகனை மாலை உச்சிக்கு அழைத்து சென்று  கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற மணமகளை  போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் அனகா பள்ளியை சேர்ந்த பிஹெச்டி மாணவி புஷ்பாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஐதராபாத்தில் இருந்து திருமணத்தை முன்னிட்டு ஊர் திரும்பிய ராமகிருஷ்ணாவை நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி வைத்துக் கொண்டாடலாம் என்று மலைப்பகுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றார் புஷ்பா.

அங்கு இரண்டு பேரும் சில மணி நேரங்களை செலவிட்டனர். அதன் பின்னர்  ‘உனக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்க போகிறேன். எனவே உன் கண்ணை இப்போது கட்டுகிறேன்’ என்று கூறிய புஷ்பா ராமகிருஷ்ணன் கண்ணை தன்னுடைய துப்பட்டாவால் கட்டினார்.  பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமகிருஷ்ணா கழுத்தை அறுத்து அவரை கொலை செய்ய முயன்றார்.

இந்த நிலையில் அலறித் துடித்த ராமகிருஷ்ணாவை பார்த்து சற்று மனம் மாறிய புஷ்பா அவரை தன்னுடைய ஸ்கூட்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். மருத்துவமனையில் டாக்டர்களிடம் நாங்கள் இரண்டு பேரும் மலை மீது உள்ள பாபா கோவிலில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தபோது  கால் தவறி ராமகிருஷ்ணா கீழே விழுந்துவிட்டார். எனவே காயம் ஏற்பட்டுவிட்டது என்று கூறினார்.

இதையும் படிங்க: Exclusive: கடமையை ஆற்றியதால் பிரச்சனை... வேறு மாநிலத்திற்கு மாற்றமா: தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்

ஆனால் மருத்துவர்கள் அவருடைய பேச்சை நம்பவில்லை. எனவே இதுபற்றி மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளித்தது. விரைந்து வந்த போலீசார்நடத்திய விசாரணையின்போது ராம கிருஷ்ணாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாத காரணத்தால் அவரை கொலை செய்ய முயற்சித்து நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து, புஷ்பாவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Andhra Pradesh, Arrest, Attempt murder case