கேரளாவுக்கு கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால், 10 மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி, பல அணைகளின் மதகுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால், கேரள மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
பேரிடர் மீட்புப் படையினருடன் ராணுவத்தினரும் இணைந்து இடையறாது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் 50,000-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவுக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த மாவட்டங்களை ஆய்வு செய்தார்.
இந்நிலையில் கேரளாவுக்கு கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்புகொண்டு வெள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கேரளாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
Published by:Saroja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.