புதுச்சேரி ஆரியப்பாளையம் கிராமத்தில் புதுச்சேரி அரசு சார்பில் நடத்தப்படும் சாராய ஆலை உள்ளது. இங்கிருந்து தான் 90 சாராயக்கடைகளுக்கும் சாராயம் முழு பாட்டில்களில் அனுப்பப்படுகிறது. தற்போது மதுபானங்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்ந்துள்ளது. இதனால் விலை குறைவான சாராயத்திற்கு பலரும் மாறி வருகின்றனர்.இதனால் சாராயத்திற்கு கிராக்கி அதிகமாகி விட்டது.
அண்மையில் இந்த சாராயக்கடைகளுக்கு ஆன்லைன் மூலம் ஏலம் நடைபெற்றது.அப்போது சாராயத்தை பெட் பாட்டிலில் வழங்கினால் கலப்படம் ஏற்படாது என கோரிக்கை அரசுக்கு வைக்கப்பட்டது.
Also Read:
உங்கள் குழந்தைக்கு இன்னும் ஆதார் அட்டை பதிவு செய்யவில்லையா? வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி அரசுக்கு முக்கிய வருவாயை கலால் துறை தான் வழங்கி வருகிறது. இதனால் "குடி" மகன்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது. இதனால் அரசு சாராய ஆலையில் பெட் பாட்டலில் சாராயம் அடைக்கும் பணி துவங்கியுள்ளது.
இந்த ஆலையை தொழில் துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "சாராய ஆலையின் மூலமாக பெட் பாட்டிலில் சாராயம் தர கோரிக்கை வந்தது. ஏலத்தின் போது இக்கோரிக்கை வலுத்தது. பெட் பாட்டிலில் சாராயம் தரும் பணியை துவக்கியுள்ளோம்.
Also Read:
வியாழன் துணைக்கோளில் ’நீராவி’- நாசா கண்டுபிடிப்பு
அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். இந்நிறுவனம் லாபமாக நடக்கிறது. லாபமாக நடத்த அனைத்து வழிமுறைகளும் ஆராயப்பட்டு செயல்படுத்தப்படும். தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
லிங்காரெட்டிபாளையம் சர்க்கரை ஆலையில் மொலாசஸ் பயன்படுத்தி உற்பத்தி செய்வது தொடர்பாக அப்பகுதி மக்கள் கருத்து கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.