மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 100 நாட்களில் இருந்து 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என்று தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் ரவீந்தரநாத் குமார் வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் பேசிய அவர், கொரோனா ஊரடங்கால் நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிய தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறினார்.
மேலும் படிக்க....மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி
தமிழகத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 85 லட்சம் பேர் பணியாற்றி வருவதாகக் கூறிய அவர், கொரோனா பேரிடரில் இருந்து கிராமப்புற மக்கள் மீண்டு வர 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lok sabha