சீன அதிபுர் உடனான சந்திப்பிற்கு பின் மாமல்லபுரத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருவதாக தமிழக முதல்வர் பழனிசாமி என்னிடம் கூறியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் கடந்த 10, 11ம் தேதிகளில் நடந்தது. மாமல்லபுரம் வந்த இரு தலைவர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜூனன் தனுசு, வெண்ணெய் உருண்டை பாறை, கடற்கோயில் உள்ளிட்ட இடங்களின் வரலாற்று பெருமையை சீன அதிபருக்கு மோடி எடுத்துரைத்தார்.
இந்நிலையில், நேற்று
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தொடர்பாக ஷாருக் கான், ஆமிர் கான் கான் மற்றும் கங்கனா ரனாவத் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பிரதமர் மோடி கலந்தாலோசித்தார்.
அப்போது, மாமல்லபுரத்தில் நடைபெற்ற உச்சிமாநாட்டிற்கு பின் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவதாக தமிழக முதல்வர் என்னிடம் கூறினார். வரலாற்று சின்னமான இடத்தை பலர் வந்து ரசித்து செல்கின்றனர் என்று அவர்களிடம் பிரதமர் கூறினார்.
பிரதமரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் “ மாமல்லபுரத்தில் நடைபெற்ற உச்சிமாநாட்டிற்கு பின் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவதாக தமிழக முதல்வர் என்னிடம் கூறினார். வரலாற்று சின்னமான இடத்தை பலர் வந்து ரசித்து செல்கின்றனர். இந்தியாவிற்கு அதிகப்படியான சுற்றுலாப்பயணிகள் வருகை தர ஒன்றிணைந்து செயல்படுவோம்“ என மோடி கூறியுள்ளதை பதிவிட்டுள்ளனர்.
Also Watch
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.