இந்திய கடற்படையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கடற்படையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு பணி வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆண்களை விட பெண்களுக்கு உடல் வலிமை குறைவு என்பதால், படைக்கு தலைமை வகிக்கும் கமாண்டர் பதவி பெண்களுக்கு மறுக்கப்படுவதாவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், கடற்படையில் இணைந்து தேசத்திற்காக பணியாற்ற விரும்பும் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படாதது தவறானது என்றது.
மேலும் ஆண்கள் - பெண்கள் என பேதம் பார்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் உயர்பதவியில் பெண்களை நியமிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தது. மேலும், இந்த உத்தரவை மூன்று மாதங்களில் செயல்படுத்தும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
Also see...
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.