விங் கமாண்டர் அபிநந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என்று மக்களவையில் பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌந்திரி வலியுறுத்தியுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தியது. அதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ராணுவ விமானம் இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்தது.
அந்த விமானத்தை விரட்டிச் சென்ற இந்திய ராணுவத்தின் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிறைபட்டார். பின்னர், ஒரு நாளில் அவர் விடுவிக்கப்பட்டார். அபிநந்தனின் முறுக்கு மீசை இந்திய அளவில் பிரபலமானது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் அந்த மீசையை ரசித்தனர்.
இந்தநிலையில், மக்களவையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்திரி, ‘அபிநந்தன் வர்த்தமானை மத்திய அரசு பெருமைப்படுத்த வேண்டும். அவருடைய மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.