முகப்பு /செய்தி /இந்தியா / Visakhapatnam | ஹைதராபாத்தில் இருந்து ஒடிசாவிற்கு சென்ற படகு விபத்து.. சொந்த ஊருக்கு செல்ல முயன்ற புலம்பெயர் தொழிலாளர்கள் 8 பேர் மாயம்..

Visakhapatnam | ஹைதராபாத்தில் இருந்து ஒடிசாவிற்கு சென்ற படகு விபத்து.. சொந்த ஊருக்கு செல்ல முயன்ற புலம்பெயர் தொழிலாளர்கள் 8 பேர் மாயம்..

படகு விபத்து

படகு விபத்து

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சொந்த ஊர் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களின் படகு கவிழ்ந்ததில் 8 பேரைக் காணவில்லை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஓடிசா-ஆந்திரா எல்லையில் உள்ள சிலேரு ஆற்றில் படகு கவிழ்ந்ததில் ஒரு குழந்தை உயிரிழந்தது. மேலும் 8 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆற்றில் முழ்கிய புலம் பெயர் தொழிலாளர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஒடிசாவில் இருந்து வந்து ஹைதராபாத்தில் கூலி வேலை செய்து வந்த தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் செல்ல முடிவு செய்தனர். சாலை மார்க்கமாக செல்ல முடியாது என்பதால் விசாகப்பட்டினத்தில் இருந்து படகில் ஒடிசா செல்ல முடிவு செய்தனர். இதற்காக நேற்றிரவே விசாகப்பட்டினம் வந்த அவர்கள், அங்கு 2 நாட்டுப் படகை வாடகைக்கு எடுத்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 11 பேர் சில்லேரு நதியில் படகில் பயணம் மேற்கொண்டனர்.

மேலும் படிக்க..புதுக்கோட்டை: பசியால் வாடுபவர்களுக்கு உணவு வழங்கும் தொண்டு நிறுவனம்

அப்போது, முதலில் சென்ற படகு நீரில் கவிழ்ந்தது. இதனால் 2-வது படகில் அனைவரும் ஏற முயன்ற நிலையில் அதுவும் கவிழ்ந்தது. இதில் 2 பேர் மட்டும் நீந்திக் கரையேறினர். அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் தேடுதல் பணி நடைபெற்று வரும் நிலையில் ஒரு குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. காணாமல் போன 8 பேரையும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

' isDesktop="true" id="470093" youtubeid="8zPZK0onr94" category="national">

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Accident, Andhra Pradesh, Boats, Migrant workers