பிரதமர் நரேந்திர
மோடி 82 வது மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றவுள்ளார். இன்று காலை 11 மணிக்கு அவர் உரையாற்றுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்னும் நிகழ்ச்சி மூலம் வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். மருத்துவம், நீர் மேலாண்மை, கொரோனா பாதுகாப்பு என பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசி வருகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய நரேந்திர மோடி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் 'நாக நதி' சில ஆண்டுகளுக்கு முன் வறண்டு போனது. நாக நதியை மீட்டெடுக்க அப்பகுதி பெண்கள் மேற்கொண்ட முயற்சியால் மீண்டும் அந்த நதி உயிர்பெற்றுள்ளதாகவும் பாராட்டினார்.
இந்நிலையில், 82வது மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தான் என்ன பேசவேண்டும் என்று தாங்கள் விரும்பும் விஷயங்களை தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
பொதுமக்கள் தங்கள் யோசனையை நமோ செயலி அல்லது 1800-11-7800 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். மேலும் https://mygov.in/group-issue/in என்ற இணைய தளத்திலும் பதிவு செய்யலாம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.