முகப்பு /செய்தி /இந்தியா / டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

இந்தியாவின் பிரதமராக 9வது முறையாக செங்கோட்டையை தேசிய கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :

75வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்தார்.

இந்தியாவின்  75வது சுதந்திர தினம் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று 13ம் தேதி முதல் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சுதந்திர தினத்தையொட்டி இன்று காலை மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து 7.14 மணிக்கு புறப்பட்ட மோடி, 7.18 மணிக்கு செங்கோட்டை வந்தடைந்தார்.  அங்கு, முப்படை வீரர்கள்,   பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் பிரதமரை வரவேற்றனர்.

இதை தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுகொண்டார்.  இதையடுத்து இந்தியாவின் பிரதமராக 9வது முறையாக செங்கோட்டையை தேசிய கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்தார்.

சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்ற இவ்விழாவை முன்னிட்டு, செங்கோட்டையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால்  செங்கோட்டை பகுதியில் உள்ள கடைகளுக்கு சீல் வைத்து 400 சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், செங்கோட்டையை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ட்ரோன் போன்றவை வானில் பறக்கவும் தடை விதிக்கப்பட்டது.

First published:

Tags: Independence day, Narendra Modi