சபரிமலையில் நடைதிறக்கப்பட்டு 12 நாள் ஆகும் நிலையில், இதுவரை தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது.
கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் தினசரி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.
நடை திறக்கப்பட்டு 12 வது நாளாகிய நிலையில், சபரிமலையில் இதுவரை தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது.
இன்று 63 ஆயிரத்தி 130 பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். ஒரு நாளைக்கு அதிக பட்சமாக 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய முடியும்.
நேற்று 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இன்று அதிகாலையில் 3 மணிக்கு பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை மற்றும் அபிஷேகம் நடத்தப்பட்டது.
இதையும் படிங்க | பைக், ஆட்டோ, சரக்கு வாகனங்களில் வரக்கூடாது : சபரிமலையில் புதிய கட்டுப்பாடு
அதிகாலை 4 மணி முதல் மதியம் 1 மணிக்கு நடை சாத்தும் வரையிலும், மேலும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தும் வரைக்கும் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இன்று காலை 9 மணி வரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இம்மாதம் இறுதி வரை 8 லட்சத்து 79 ஆயிரத்து 905 பேர் ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்திருக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ayyappan temple in Sabarimala, Sabarimala Ayyappan, Sabarimalai, Sabarimalai Ayyappan temple