ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த அவர்களில், ஒருவர் பாகிஸ்தானியர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. மேலும் ஒரு தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
ஜம்மு, காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது, நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகள் மறைந்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், ஜம்மு & காஷ்மீரின் 5 இடங்களில் நேற்று இரவு முதல் பாதுகாப்புப் படையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட தொடங்கியதால், பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். காலை வரை இந்த மோதல் நீடித்த நிலையில், புல்வாமா பகுதியில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த அவர்களில், ஒருவர் பாகிஸ்தானியர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. மேலும் ஒரு தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதனிடையே, கந்தர் பால் மற்றும் ஹந்த்வார் ஆகிய பகுதிகளில், லஷ்கர் - இ - தொய்பா அமைப்பை சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கந்தர்பால் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.