மூணாரில் வனப்பகுதியில் 10 நாட்களுக்குள் அடுத்தடுத்து மூன்று குட்டி யானைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா தலமான முணாறு வனப்பகுதியில் வன விலங்குகள் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக யானைகள் இங்கு அதிக எண்ணிக்கையில் உள்ளன. மூணாரில் வரும் சுற்றுலா பயணிகள் குட்டிகளுடன் வரும் யானை கூட்டத்தை கண்டு ரசிப்பது வழக்கம். இந்நிலையில் மூணாரு தேவிகுளம் வனச்சாரகத்திற்கு உட்பட்ட புதுக்கடி வனப்பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு குட்டி யானையும் அதே போல குண்டலா வனப்பகுதியில் 2 வயதில் இரண்டு குட்டி குட்டி யானைகள் என மூன்று குட்டி யானைகள் உயிரிழந்த நிலையில் சடலமாக வனத்துறையால் மீட்கப்பட்டது.
இந்த குட்டி யானைகள் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற்கூராய்வின் முதல் கட்ட ஆய்வு அறிக்கையில் முதலில் இறந்த குட்டி யானைக்கு உள் உறுப்புகளில் ஹெர்ப்பிஸ் எனும் தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இருப்பினும் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்று கண்டறிய கூடுதல் ஆய்விற்கு இறந்த யானைகள் உள் உறுப்புகள் காக்கநாடு கெமிக்கல் ஆய்வகத்தில் அனுப்பி உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த ஆய்வு முடிவுகள் வந்த பிறகு தான் உயிரிழப்பிற்கு காரணம் என்ன என்று தெரிய வரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அடுத்தடுத்து யானைகள் உயிரிழந்த நிலையில் வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Elephant, Elephant and calf, Kerala