முகப்பு /செய்தி /இந்தியா / திருப்பதியில் கூட்டத்தை பயன்படுத்தி 16 ஆயிரம் லட்டுகள் திருட்டு!

திருப்பதியில் கூட்டத்தை பயன்படுத்தி 16 ஆயிரம் லட்டுகள் திருட்டு!

திருப்பதி லட்டு

திருப்பதி லட்டு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்ட நெருக்கடியை பயன்படுத்தி 16 ஆயிரம் லட்டுகளை திருடியதாக ஒப்பந்த பணியாளர்கள் 8 பேரிடம் விசாரணை நடக்கிறது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

திருப்பதி மலையில் இருக்கும் லட்டு கவுண்டர்களில் விற்பனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட 16 ஆயிரம் லட்டுகள் மாயமாகியுள்ளன. லட்டு விற்பனை கவுண்டர்களில் வங்கிகளின் ஏற்பாட்டில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் 8 பேரை பிடித்து சென்று தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் விசாரணை நடத்து வருகின்றனர்.

கடந்த 14-ம் தேதி பிரம்மோற்சவ கருட வாகன சேவை அன்று லட்டு விற்பனையில் ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

திருப்பதி மலையில் இருக்கும் லட்டு விற்பனைக் கவுண்டர்களில் தேவஸ்தான பணியாளர்கள், ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர்கள், வங்கிகளின் ஏற்பாட்டின் கீழ் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் ஆகியோர் லட்டு விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 10-ம் தேதி துவங்கி திருப்பதி மலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருடவாகன சேவை 14-ம் தேதி நடைபெற்றது.

அன்றைய தினம் சாமி தரிசனத்திற்காக 4 லட்சம் பக்தர்கள் திருப்பதி மலையில் திரண்டனர்.அவர்களில் பெரும்பாலானோர் இலவச தரிசனத்திற்காக சென்றிருந்தனர். 14-ம் தேதி சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இலவச தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தனர்.

இலவச தரிசனத்திற்காக செல்லும் தரிசனத்துக்கான சாமி தரிசனத்துக்கா வரிசையில் லட்டு வாங்குவதற்கான டோக்கன்கள் வழங்கப்படும். சாமி கும்பிட்டு வெளியில் வந்தபின் லட்டு விற்பனை கவுண்டர்களில் டோக்கன்களை கொடுத்து பக்தர்கள் லட்டுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கருட சேவையின் போது கலந்து கொண்ட பக்தர்கள் கூட்டத்தின் ஒருபகுதி

பக்தர்களிடமிருந்து பெறப்படும் டோக்கன்களை வாங்கும் ஊழியர்கள் அவற்றில் அச்சிடப்பட்டிருக்கும் பார்கோடுகளை ஸ்கேன் செய்து சரி பார்த்த பின்னர் லட்டுகளை வழங்குவார்கள்.

போலி டோக்கன்களை கொடுத்து யாரும் முறைகேடுகளில் ஈடுபடாமல் தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருடசேவை நாள் என்று பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. எனவே டோக்கன்களை ஸ்கேன் செய்யும் போது சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் கண்டுகொள்ள வேண்டாம். பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. எனவே மக்களுக்கு உதவும் வகையில் செயல்படுங்கள் என்று தேவஸ்தான அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த உத்தரவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஊழியர்கள் அன்று ஒரே நாளில் மட்டும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லட்டுகளை திருடியுள்ளனர்.

ஏழுமலையான் கோவிலில் பிடிக்கப்படும் லட்டுகளை டிரேக்களில் அடுக்கி கண்வேயர் பெல்ட் மூலம் கவுண்டர்களுக்கு அனுப்புவது வழக்கம். ஒவ்வொரு டிரேயிலும் 51 லட்டுகள் இருக்கும்.

இந்த நிலையில் கருடசேவை நாளன்று தேவஸ்தான அதிகாரிகள், விஜிலென்ஸ் அதிகாரிகள் விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆகியோர் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது ஆகியவற்றில் மூழ்கி இருந்தனர்.

இந்த சூழ்நிலைகளை தங்களுக்கு பயன்படுத்தி கொண்ட கவுண்டர்களில் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்கள் அன்று ஒரே நாளில் மட்டும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லட்டுகளை மாயம் செய்துவிட்டனர்.

கருடசேவை முடிந்த பின் பக்தர்கள் வருகை குறைய துவங்கியது. இதனால் தேவஸ்தான அதிகாரிகள் தங்களுடைய வழக்கமான பணிகளில் ஈடுபட்டனர். அப்போது கருடசேவை நாளன்று விற்பனை செய்யப்பட்ட லட்டுக்களின் எண்ணிக்கைக்கும் பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட டோக்கன்களி்ன் எண்ணிக்கைக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக தேவஸ்தான அதிகாரிகள் கொடுத்த தகவலின பேரில் விஜிலென்ஸ் துறையினர் ஒப்பந்த ஊழியர்கள் 8 பேரை பிடித்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த முறைகேடு தேவஸ்தான அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்களை பணியில் அமர்த்தி லட்டு விற்பனையில் ஈடுபட்டுள்ள வங்கிகளின் அதிகாரிகள், பக்தர்கள் ஆகியோரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Laddu, Theft, Tripati