கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தின் ஜீவர்கி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு கடந்த சில நாள்களாகவே தொடர்ந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாந்தி எடுத்தும் மயக்கமடைந்து சிறுமி தவித்து வந்துள்ளார். முதலில் இதை சாதாரன பாதிப்பு என நினைத்த சிறுமியின் தாயார், பிரச்சனை சீராகாத நிலையில் ஜனவரி 31ஆம் தேதி சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிறுமியிடம் உண்மையை விசாரித்தனர்.
அப்போது தான் இந்த கர்ப்பத்திற்கு காரணம் சிறுமியின் தந்தையே என்பது அம்பலமானது. சிறுமியின் தாயார் வயல் வேலைக்கு சென்றபோது, தந்தை தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சிறுமி தனக்கு நேர்ந்த அவலத்தை கூறியுள்ளார்.இதைத் தொடர்ந்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், விவரமறிந்த சிறுமியின் தந்தை அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார். அவரை காவல்துறை வலைவீசி தேடி வருகிறது. தந்தை தனது மகளை கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Karnataka, Rape