ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கொட்டி தீர்த்த மழையால் மிதக்கும் 50க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 2000க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாகவே மிதமான மழையும், கனமழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சோளம், பருத்தி, நெல் உள்ளிட்ட பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
தொடர் மழையால் ராசிபுரம் சுற்றியுள்ள அணைப்பாளையம் ஏரி, தட்டான் குட்டை ஏரி, ராசிபுரம் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் நீர் அதிகரித்து கொண்டு வருகிறது. நீர் வரத்து அதிகரிப்பால் ஏரி கடல் போல் காட்சியளிக்கிறது. மேலும் சந்திரசேகரபுரம் குடியிருப்பு பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் நீரில் மூழ்கிதால் தற்போது தங்க இடமில்லாமல் தவித்து வருவதாகவும் உணவுக்கு வழியில்லாததால் அக்கம் பக்கத்தினர் கொடுக்கும் உணவை உண்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
தற்போது மழை விட்ட பின்பும் இதுவரை அமைச்சர் எம்.பிகள் மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவோ ஆறுதல் கூறவோ வரவில்லை எனவும் வேதனையுடன் கூறுகின்றனர்.
செய்தியாளர்: பிரதாப், நாமக்கல்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heavy rain, Local News, Namakkal, Rasipuram