தமிழ்நாட்டில் பீகார் மற்றும் இந்தி பேசும் மாநிலங்களின் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின. இந்நிலையில், பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், தமிழ்நாட்டில் பணியாற்றும் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக பத்திரிகை செய்திகள் மூலம் அறிந்தேன்.
இதுகுறித்து, தமிழ்நாட்டு அதிகாரிகளுடன் பேசி, அங்கு பணியாற்றும் பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பீகார் தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.யை கேட்டுக்கொண்டுள்ளேன் என தனது ட்விட்டரில் கூறியிருந்தார்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு கடைகள் மற்றும் பேக்டரிகளில் பணியாற்றும் பீகார், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தெரிவிக்கும்போது, “நாமக்கல் மாவட்டத்தில் கடந்த பல ஆண்டாக வசித்து வருகிறோம். இதுநாள் வரையில் எங்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. மாறாக தமிழர்கள் சகோதரத்துவத்துடன் பழகி வருகிறோம்” என தெரிவித்தனர்.
செய்தியாளர் : ரவிச்சந்திரன் ராஜகோபால் - நாமக்கல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Migrant workers, Namakkal