ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த மே மாதம் நாமக்கல் மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.
அதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து பணியாற்றி வந்த அவர், தனது சொந்த மாநிலத்தில் பணியாற்ற வேண்டும் என விருப்ப மாறுதல் கேட்டு தமிழக அரசுக்கு விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேசிய காவல் அகாடமிக்கு மாறுதல் செய்யப்பட்டார்.
இதையும் படிங்க : அறிவியல் கண்காட்சியில் அசத்திய நாமக்கல் அரசு பள்ளி மாணவர்கள்...
அதன்படி சாய்சரண் தேஜஸ்வி நேற்று தனது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பில் இருந்து விடைப்பெற்று சொந்த ஊருக்கு சென்றார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தற்போது, மாவட்ட மதுவிலக்கு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மணிமாறன், காவல் கண்காணிப்பாளர் பொறுப்பையும் சேர்த்து கவனித்து வருகிறார்.
நாமக்கல் செய்தியாளர் - பிரதாப்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal